Sunday, June 20, 2010

ராவணன் விமர்சனம்


ஒரு பத்தினி ஒரு புருஷன் சந்தேக பட்டான்னு இன்னொரு புருசனுடன் ஓட முயற்சிக்கிறாள். இது தான் கதை. முன்னாடி பாலச்சந்தர் தான் இப்படி புரட்சிகரமா தமிழ் சமுதாயத்த கெடுத்துக்கிட்டிருந்தார். இப்ப அவர் வழியில் மணியும் அவர் மனைவியும்.
வழக்கம் போல உருப்படாத படத்துக்கு உயிரை கொடுத்து உழைக்கும் விக்ரம் இந்த படத்துக்கும் உயிரை கொடுத்து உழைத்திருக்கிறார்.
மணி ஒரு சில ஆங்கில படத்திலிருந்து சில காட்சிகளும், ரஹ்மான் ட்ராய் படத்திலிருந்து சில பிட்டுகளையும் உருவி இருக்கின்றனர்.
விக்ரம் பேசாம மிருகங்களுக்கு மிமிக்ரி கொடுக்க போகலாம். அவர் அப்படித்தான் இந்த படத்தில் பேசுகிறார். மணியும், ரஹ்மானும் தமிழ் படங்களின் மீதான பிடிமானத்தை இழந்து வருவதற்கு இந்த படமே சாட்சி. மனசுக்கு கஷ்டமாக தான் இருக்கு. மணி படத்தை டி ராஜேந்தர் படத்தோட ஒப்பிடுவதற்கு. ஆனாலும் வேற வழியில்ல. டி ராஜேந்தர் படத்தில் எல்லாம் இருக்கும் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட், பைட். ஆனால் எது எங்க இருக்கணுமோ அது அங்க இருக்காது. இந்த படத்திலும் அதே தான். ஒளிப்பதிவு, எடிட்டிங், etc, etc.. எல்லாம் இருந்தும் எது எப்படி எங்கே இருக்கணுமோ அது அங்கே இல்ல.

Wednesday, June 16, 2010

தமிழன் தாங்கு வாண்டா ....


தினமும் பேப்பர் பார்க்கும் போது என் மனதில் எழுந்த சந்தேகங்கள்.
குஷ்பூ இன்னும் தமிழறிஞராக கருணாநிதியால் அறிவிக்கப்படவில்லையே ஏன்?
கருணாநிதி குடும்பத்தில் பிறந்த சிறு குழந்தை கூட தமிழ் புலவராகி விடுகிறதே. ஏன்?
பக்கத்து மாநிலமான கர்நாடகா வில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 28000 கோடி முதலீட்டை பெற்றுள்ள போது, இங்கே 600 கோடி வெட்டியாக நம் பணம் செம்மொழி மாநாடு என்ற பெயரில் வீணாகிறதே. ஏன்?
கருணாநிதி மாநாடு நடத்தி தான் தமிழ் வளர வேண்டுமா? அவருக்கு முன்னாள் தமிழ் என்ற மொழி வாழ்ந்ததோ, வளர்ந்ததோ இல்லையா என்று யாரும் கேட்பதில்லையே. ஏன்?
எல்லா அமைச்சர்களும் தினமும் ஒரு செம்மொழி சிலைக்கு முன் போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார்களே. இவர்கள் இல்லாமலே நிர்வாகம் வழக்கம் போல நடக்கிறதே. இவர்களெல்லாம் ஏன்?
இப்படி ஒரு கேடு கேட்ட மாநாட்டை லக்கி லுக் போன்ற செம்மொழி தமிழர்களெல்லாம் ஆதரிக்கிறார்களே ஏன்?

செம்மொழி தொடர்பில்லாத மேலும் சில சந்தேகங்கள்.
இன்னும் மதுரையில் அழகிரி பாத் ரூம் போனதுக்கு கட் அவுட் வைக்கலையே ஏன்?
கொடநாடு என்றால் ஜெயலலிதாவுக்கு கோபம் வருகிறதே ஏன்?
கிழக்கு பதிப்பகம், அழகிரியின் வாழ்க்கை வரலாறை ஆறு ஆறு மாதங்களாக பிரித்து குறைந்தது 100 புத்தகம் கூட போடவில்லையே ஏன்?

இதற்க்கெல்லாம் ஒரே பதில் தான் இருக்க வேண்டும். அது.....
தமிழன் தாங்கு வாண்டா ....