Saturday, September 5, 2009

கந்தல் சாமி


கந்தல் சாமி. கதை - இந்தக் கதையை எழுதியவர் கடந்த 75 வருடங்களாக தமிழ் சினிமாவை பார்க்காமல் எழுதியதால் இது மிகவும் புதுமையான கதை. படம் பார்ப்பவர் சினிமாவோ சீரியலோ அவர் வாழ்க்கையில் பார்த்திருக்க கூடாது. விக்ரம் - இந்த படத்தில் நடித்ததுக்கு பேசாமல் பீமா பார்ட் 2 பண்ணியிருக்கலாம். எங்கே படம் பார்ப்பவர்கள் படம் நல்லாயிருக்குன்னு சொல்லிருவங்கன்னு பயந்து பாட்டெல்லாம் அவரே பாடியிருக்கார். ஸ்ரேயா - இந்த படம் பார்ப்பதுக்கு முன் ஸ்ரேயான்னா எதோ பொம்பளைன்னு நினச்சிருந்தேன். இப்ப தான் தெரியுது ஸ்ரேயான்னா ஆம்பளைன்னு. சுசீ கணேசன் - Five Star எடுத்த சுசீ கணேசனா இது. படம் எடுக்க சொன்னா power point slide எடுத்துருக்காரு. போற போக்கை பார்த்த விஜய் பட டைரக்டர் ஆக சான்ஸ் நிறையவே இருக்கு. ஏகாம்பரம் - இவரு தான் ஒளிப்பதிவாளர். இந்த படத்துல photography ல நிறைய புதுமை பண்ணி இருக்குறதா பேட்டி எல்லாம் குடுத்தாரு. hollywood க்கே இந்த படம் சவால் விடும்னு சொன்னாரு. முதல்ல indian news reel க்கு போட்டியா எடுங்க சார். தானு - இவர் எடுத்த எந்த படமும் ஓடுன மாதிரியே தெரியல. ஆனாலும் சளைக்காம 50 கோடி 60 கோடி ன்னு செலவு பண்றாரு. எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குரானே இவன் ரொம்ப நல்லவனா இருப்பானோ? படம் பார்க்கதவர்களுக்கு - விக்ரம் போடோவையும் ஸ்ரேயா போட்டோவையும் வைத்து பவர் பாயிண்ட் ல ஸ்லைடு ஷோ பன்னுநீங்கன்னா அது தன கந்த சாமி.

Saturday, April 11, 2009

கொத்தனார் தமிழ் உரை

நாளுக்கு நாள் தமிழ் வளர்ந்து வரும் வேகத்தில் தினமும் புது dictionary போடணும் போல இருக்கு. ஏற்கனவே கோனார் தமிழ் உரை இருப்பதனால் காப்பி ரைட் பிரச்சனை வராமல் இருக்க கொத்தனார் தமிழ் உரையை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இந்த கொத்தனார் தமிழ் உரையில் சமீபத்தில் அர்த்தம் மாறிய ஒரு சில வார்த்தைகளை உங்களுக்கு update செய்கிறேன்.
அன்பழகன் -- சட்டையை கழற்ற சொன்னால் வேட்டியையும் கழற்றி விட்டு நிற்பவர்.
அழகிரி -- அப்பா முதலமைச்சராக இருக்கும் போது ஆட்டம் போடுபவர்.
அமைச்சர் -- ரௌடித்தனம் செய்து சம்பாதிப்பவர்.
தேர்தல் -- J.K. ரித்தீஸ் செலவு பண்ணும் திருவிழா.
கருணாநிதி -- இவரை போல ஒரு அப்பா நமக்கு இல்லையே என்று தமிழகத்தில் உள்ள எல்லா மகன்களையும் ஏங்க வைத்த குடும்பத் தலைவர்.
வைக்கோ -- இலங்கை தமிழருக்காக கதறி கண்ணீர் விட்டு நாலு M.P. சீட் வாங்குபவர்.
விஜயகாந்த் -- பாகிஸ்தான் தீவிரவாதி யாரும் உதைக்க சிக்காததால் தமிழக மக்களை வதைப்பவர்.
சரத்குமார், கார்த்திக் -- அவர்களின் ஒரு வோட்டு யாருக்கு என்று தினமும் பத்திரிக்கைகளை குழப்புபவர்கள்.
ஜெயலலிதா -- தினமும் பிரதமர் கனவிலே இருப்பவர்.
பிரதமர் -- ஒரு வார்த்தை பேசும் முன் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் பெர்மிசன் வாங்குபவர்.
ஜனாதிபதி -- இந்திய கிரிக்கெட் மாட்சில் ஜெயிக்கும் போது மட்டும் வாழ்த்தி அறிக்கை விடுபவர்.
இலங்கை தமிழர் -- முப்பது வயசுக்குள் சாவதற்கென்றே பிறந்தவர். இலங்கை பிரச்சனை -- பேச்சையும், பேரணியையும் வளர்த்து விட்டு வோட்டு வாங்கும் பிரச்சனை.

Friday, July 18, 2008

விக்ரமாதித்தனும் வேதாளமும்


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை வெட்டி தன் தோளில் போட்டு நடக்கும் போது வேதாளம் பேச ஆரம்பித்தது. விக்க்ரமதித்தா! ஏற்கனவே அம்புலிமாமாவில் வரும் கேள்வி பதில் போல இல்லாமல் நான் கேள்விப்பட்ட சேதிகளை உன்னிடம் கூறுகிறேன். அதற்கு உன் கருத்தை கூறு. அப்படி உன் கருத்தை கூறாவிட்டால் உன் தலை சுக்கு 99 ஆக வெடித்து விடும்.(எவ்வளவு நாள் தான் சுக்கு 100 ஆகவே உடைவது). அதற்கு ஒப்புக்கொண்ட விக்ரமாதித்தனிடம் வேதாளம் செய்திகளை கூற ஆரம்பித்தது.


வேதாளம் : திரிஷாவுக்கு கடலூரில் ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்களே.

விக்ரமாதித்தன் : கடலூரில் மட்டும் தான் திரிஷாவின் பாத்ரூம் CD அதிகம் கிடைக்கிறது போல் தெரிகிறது.

வெரிகுட் என்பது போல் பார்த்து வேதாளம் தொடர்ந்தது.

வேதாளம் : கனிகாவுக்கு அமெரிக்கா சாப்ட்வேர் எஞ்சிநீருடன் கல்யானமமே.

விக்ரமாதித்தன் :முதலில் (சசிகலா) நடராஜன். அடுத்து கன்னட பிரசாத்துடன் தொழில் செய்தார். இப்போ கல்யாணம். ஒருவேளை அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியர் என்றால் வேற எதாவது தொழிலா இருக்குமோ?

என்னிடம் கேள்வி கேட்காதே கருத்தை மட்டும் கூறு என்று வேதாளம் எச்சரித்து விட்டு தொடர்ந்தது.

வேதாளம் :வானம். காலை. பயணம்.நடக்கிறேன். காலம். நான். நீ. இல்லை. தெரியும்.தேடுகிறேன். தொடர்கிறேன். இது என்ன?

விக்ரமாதித்தன் :இது குங்குமத்தில் வெளியான பெண் கவிஞரின் கவிதை.

வேதாளம் : என்னது கவிதையா? என்று மயக்கமடைந்த வேதாளத்தை மயக்கம் தெளிவித்த


விக்ரமாதித்தன் : ஆம். பெண் கவிஞர்களுக்கு பொறுக்கியின் டெம்ப்ளட் தேவை இல்லை. அவர்கள் அரிசி. உப்பு. புளி. என்று எழுதினாலே கவிதை என்று போட்டு விடுவார்கள்.ஆகவே அவர்கள் பெண் கவிஞர்களாகி விடுகிறார்கள்.

வேதாளம் :கலைஞரின் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நோபெல் பரிசுக்கு அனுப்பும் குழுவில் இருவர் பெண் கவிஞர்களாமே?.

விக்ரமாதித்தன் :அழகிரியின் மகள் கவிஞர் கயல்விழியையும், கவிஞர் தமிழச்சியையும் சொல்கிறாய் என்று நினைக்கிறேன். அவர்கள் பெண் கவிஞர்களாதலால் அவர்களுக்கு கலைஞரின் எழுத்துக்கள் இலக்கியங்களாகவே தெரியும். அடங்கொய்யாலே நோபெல் பரிசு இவ்வளவு மட்டமானதா?

வேதாளம் : கவிஞர் கயல்விழி நான் என்றுமே கவிஞர் கனிமொழியுடன் போட்டிக்கு வரமாட்டேன் என்று சொல்கிறாரே?

விக்ரமாதித்தன் : இதற்கு மேல் கவிஞர் கயல்விழி பற்றி பேசினால் அழகிரியின் ஆட்களால் நானும் உன்னை மாதிரி வேதாளமாகி மரத்தில் தொங்க வேண்டியதுதான்.

(விக்கியை பரிதாபமாக பார்த்த வேதாளம் தொடர்ந்தது)சரி நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவர் அப்பா சொல்கிறாரே?

விக்ரமாதித்தன் : அப்ப அடுத்த நோபெல் பரிசு விஜயின் "போடங்கோ" போன்ற இலக்கியத்துக்குதான் என்று நினைக்கிறேன்.

(சற்றே மிரண்ட வேதாளம் நோபெல் செய்திகளை தவிர்த்தது)தசாவதாரம் பற்றி உன் கருத்து என்ன விக்க்ரமாதித்தா?

விக்ரமாதித்தன் : ஏற்கனவே தசாவதாரம் பட போஸ்டர் முன்னாடி ஒன்னுக்கு அடிச்சவன்லாம் விமர்சனம் எழுதிவிட்டதால் என் கருத்து தேவைஇல்லை. இருந்தாலும் படம் சரியாக ஓடாவிட்டால் கமலே வேறு வேறு கெட்டப்பில் எல்லா வூருக்கும் சென்று படம் பார்க்க நினைத்தாராம். தினமும் ஒரு ஆள் வருகிறார் என்று படத்தை ஒட்டுவார்களாம். ச்சே ஒரு கின்னேஸ் ரெகார்டை தமிழ்நாடு மிஸ் பண்ணி விட்டது.

வேதாளம் : குசேலன் படத்தில் எதோ சஸ்பென்சாமே ?


விக்ரமாதித்தன் : ரஜினிக்கு எத்தனை பாடல்கள் என்பது தான் சஸ்பென்ஸ் என்று பி. வாசு ஒரு பேட்டியில் சொன்னார். இப்போது ரஜினிக்கு இரண்டு பாடல்கள் என்று சஸ்பென்ஸ் வெளியானதால் படம் ஓடுமா என்ற சந்தேகம் வந்திருக்கிறதாம்.

வேதாளம் : இறுதியாக ஒரு சந்தேகம்? ரஜினியின் எந்த படத்தை பார்த்தாலும் அதற்கு முந்திய படம் பரவாயில்லை போல் தோன்றுகிறதே. அப்படியானால் அவரின் முதல் படம் பார்க்கும் போது என்ன தோன்றியிருக்கும்?

விக்ரமாதித்தன் : ? ? ? ? ?


இதை வாசித்த நண்பர்களே இந்த கேள்விக்கு விக்கியிடம் பதில் அல்லது கருத்து இல்லாததால் அவன் தலை சுக்கு 99 ஆவதை தவிர்க்க நீங்கள் கருத்து சொல்லுங்களேன். சொல்பவர்களுக்கு என் சொத்தில் பாதியும் (50 பைசா) கொடுத்து சமீபத்தில் மும்பை ரெட் லைட் ஏரியாவில் தத்தெடுத்த என் 20 வயது மகளையும் உங்களுக்கே கல்யாணம் பண்ணி தருவதாக இதன் மூலம் வாக்களிக்கிறேன்.

Monday, March 31, 2008

நில், கவனி ... கவிதை எழுது..!



இந்தப் பதிவை அடிக்கடி (???) கவனித்து வரும் (என்னைத் தவிர ) நண்பர்களுக்கு கடுமையான வேலையின் காரணமாக என்னால் எழுத முடியவில்லை. இனி அவ்வப்போது எழுதலாம் என்றிருக்கிறேன். ஆமாம் அடிக்கடி பதிவு எழுதுகிறவர்களுக்கு ஒரு கேள்வி. இப்படி வெறித்தனமாக பதிவு எழுதுகிறீர்களே. பூவாவுக்கு என்ன செய்கிறிர்கள்
சரி இனி பதிவுக்கு வருகிறேன். சமீப காலமாக (காலம் காலமாக) நான் சில கவிதைகளையும் பல கவிஞர்களையும் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் பாக்கெட்டில் மூன்று பேனா வைத்திருந்தால் நான்கு புனைப்பெயரில் கவிதை எழுதுகிறார். பத்து செகண்ட் குனிந்து கொண்டே நடந்தால் எதாவது கவிஞர் கடலைபருப்பு, அல்லது கவிஞர் காத்துவாயன் மேல் மோதி விடும் அபாயகரமான அளவுக்கு கவிஞர்களும், புதுக்கவிதை, ஹைக்கூ, புண்ணாக்கு போன்ற கவிதை வடிவங்களும் நிறைந்திருக்கின்றன. சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் பெண் கவிதாயினிகளின் பாடு பரவாயில்லை போல் தெரிகிறது. ஏனென்றால் எதாவது பலான புத்தகத்தை படித்து விட்டு வாக்கியத்தை மடித்து மடித்து எழுதி கவிதாயினி ஆகிறார்கள். அதனால் பாவப்பட்ட ஆண் கவிஞர்களை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு என் தலைக்கு மேல் (மயிர்?) தெரிவதால் இந்தப்பதிவு. இதில் கோடிட்ட இடங்களை மட்டும் நிரப்பி நீங்களும் உடனடிக் கவிஞராக இந்தப்பதிவு உதவும் என்று நம்புகிறேன்.
இதோ கவிதை Template.

  • நீ தான்
    என்
    தெருவின்
    -----------
    (சின்னவீடு, முகவரி, முதல்வேசி, பிச்சைக்காரி)

  • நான் எழுதும்
    -------------- ல்
    எல்லாம் நீ தான்
    முதல்வரி
    (குத்துப்பாட்டு, பலான புத்தகம், கவிதை)

  • நான் உன்னை
    காணும் போது தான்
    ---------------
    மறந்துவிடுகிறது.
    (பையில் பணமிள்ளதது, என் பெயர், என் மனைவியின் பெயர், காதலியின் பெயர்)

  • எத்தனை நாள் தான்
    உன்னிடம்
    -----------
    (கடன் சொல்வது, காதலை மறைப்பது, அடி வாங்குவது)
    நீ தான்
    என்
    -----
    (பிஞ்ச செருப்பு, மயிர், உயிர் )

  • நான் உன்னை
    நோக்கினேன்
    நீ என்
    ---------
    நோக்கினாய்
    (நோக்கியாவை, பாக்கெட்டை, படுக்கையை)

  • கவிதை எழுத பேனா இருந்தும் நேரமில்லாதவர்கள் இந்தப் பதிவிலுள்ள கவிதைகளை கோடிட்ட இடங்களை நிரப்பி பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். மறக்காமல் உங்கள் பெயருக்கு முன்னால் கவிஞர் என்று சேர்த்துக் கொள்ளவும். முடிந்தால் உங்களுக்கு இந்தக் கவிதைகளால் கிடைத்த பலன்களை பின்னூட்டமிடவும்.

வாழ்க்கை சக்கரம் ....நெட்டில் சுட்டது...

Wednesday, November 14, 2007

பெயர்க்காரணம் - I.A.S. படிப்பவர்கள் கவனிக்கவும்.

என்னடா இப்படி பேர் வச்சிருக்க - னு கேக்காத ஆள் இல்லை(யார் கேட்டா? இப்படிதாங்க என் மனசாட்சி அப்பப்ப உண்மைய சொல்லும் கண்டுக்காதிங்க) சின்ன வயசில இருந்து Collector ஆகரதுதான் என்னோட கனவுங்க. (கனவு மட்டும்தான்). 12th மார்க் வந்தப்ப தான் தெரிஞ்சது Collector க்கு பியூன் கூட ஆக முடியாதுன்னு. இருந்தாலும் கஷ்டப்பட்டு, காலேஜ் தாண்டினேன். நண்பர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரையால் (எல்லா சப்ஜெக்ட் ல யும் 35 மார்க் வாங்கி பாஸ் பண்ண விசயத்தை வெளிய சொல்ல முடியுமா?) I. A. S. கனவ மூட்டை கட்டிட்டேன். சரி நம்மளை மாதிரி உருப்படாதவங்களுக்கு தான் M.C.A. இருக்கேன்னு M.C.A. படிச்சேன். இப்போ software engineer ஆ ஆயாச்சு. இருந்தாலும் கலெக்டர் கனவு போகவேயில்லை. சரி பேருக்கு பின்னால கலெக்டர் னு போடலாம்னு பாத்தா அதுவும் முடியதாம்ல. கலெக்டர் ன்னா என்னா ன்னு திடீர்னு ஒரு சந்தேகம் வர அகராதிய பாத்தா (நீயே ஒரு அகராதி) "One that collects" னு போட்டிருந்தது. அட அட அட!!!!. அப்படி பார்த்தா dust collect பண்றவன் dust collector. தமிழ்ல குப்பை பொறுக்கி. Bill collect பண்றவன் Bill collector. தமிழ்ல பில் பொறுக்கி. இப்படியே போனா நல்ல விசயங்களை (???????????) தேடித்தேடி கலெக்ட் பன்றவன என்னன்னு சொல்ல? நல்ல பொறுக்கின்னா? அதனால என்னோட கலெக்டர் கனவும் நனவாகிற மாதிரி சுருக்கமா பொறுக்கி ன்னு பேர் வச்சிருக்கேன். உங்களுக்கு தப்பா பட்டதுன்னா நீங்க நல்ல பொறுக்கின்னு வச்சிக்குங்க.