Saturday, September 5, 2009

கந்தல் சாமி


கந்தல் சாமி. கதை - இந்தக் கதையை எழுதியவர் கடந்த 75 வருடங்களாக தமிழ் சினிமாவை பார்க்காமல் எழுதியதால் இது மிகவும் புதுமையான கதை. படம் பார்ப்பவர் சினிமாவோ சீரியலோ அவர் வாழ்க்கையில் பார்த்திருக்க கூடாது. விக்ரம் - இந்த படத்தில் நடித்ததுக்கு பேசாமல் பீமா பார்ட் 2 பண்ணியிருக்கலாம். எங்கே படம் பார்ப்பவர்கள் படம் நல்லாயிருக்குன்னு சொல்லிருவங்கன்னு பயந்து பாட்டெல்லாம் அவரே பாடியிருக்கார். ஸ்ரேயா - இந்த படம் பார்ப்பதுக்கு முன் ஸ்ரேயான்னா எதோ பொம்பளைன்னு நினச்சிருந்தேன். இப்ப தான் தெரியுது ஸ்ரேயான்னா ஆம்பளைன்னு. சுசீ கணேசன் - Five Star எடுத்த சுசீ கணேசனா இது. படம் எடுக்க சொன்னா power point slide எடுத்துருக்காரு. போற போக்கை பார்த்த விஜய் பட டைரக்டர் ஆக சான்ஸ் நிறையவே இருக்கு. ஏகாம்பரம் - இவரு தான் ஒளிப்பதிவாளர். இந்த படத்துல photography ல நிறைய புதுமை பண்ணி இருக்குறதா பேட்டி எல்லாம் குடுத்தாரு. hollywood க்கே இந்த படம் சவால் விடும்னு சொன்னாரு. முதல்ல indian news reel க்கு போட்டியா எடுங்க சார். தானு - இவர் எடுத்த எந்த படமும் ஓடுன மாதிரியே தெரியல. ஆனாலும் சளைக்காம 50 கோடி 60 கோடி ன்னு செலவு பண்றாரு. எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குரானே இவன் ரொம்ப நல்லவனா இருப்பானோ? படம் பார்க்கதவர்களுக்கு - விக்ரம் போடோவையும் ஸ்ரேயா போட்டோவையும் வைத்து பவர் பாயிண்ட் ல ஸ்லைடு ஷோ பன்னுநீங்கன்னா அது தன கந்த சாமி.

3 comments:

களப்பிரர் - jp said...

ஹல்லோ மதுரை பொறுக்கி,

பொறுக்கிக்கே இந்த படம் புடிக்கலையா ?? கவலை படாதீங்க இந்த படம் புடிக்கும் - எந்திரன் ரிலீஸ் ஆனவுடன் !!!

உங்க விமர்சனம் சூப்பர்.

vijay said...

ஒரு பொண்ண தனியா தள்ளிகுனு போய்...கடைசீ பெஞ்சுல ... last seat ல குந்திகுனு ...முன்னாடி சீட்- ல கால் போட்டுகுனு பாக்குறதுக்காக நம்ம சுசீ கணேசன் அண்ணாச்சி எடுத்ருக்கார். உங்கள மாதிரி ஆளுக எல்லாம் டிக்கெட் வாங்கி கூட்டத்த கூட்டி damage பண்ணின்னது மட்டுமில்லாம இந்த மாத்ரி blog போட்டு tenson பண்ணாதீங்கோ சார்

Unknown said...

தல இந்த படம் ஒரு பாடம் . ப்டம் பார்க்கிறவர்களுக்கு