Saturday, September 5, 2009

கந்தல் சாமி


கந்தல் சாமி. கதை - இந்தக் கதையை எழுதியவர் கடந்த 75 வருடங்களாக தமிழ் சினிமாவை பார்க்காமல் எழுதியதால் இது மிகவும் புதுமையான கதை. படம் பார்ப்பவர் சினிமாவோ சீரியலோ அவர் வாழ்க்கையில் பார்த்திருக்க கூடாது. விக்ரம் - இந்த படத்தில் நடித்ததுக்கு பேசாமல் பீமா பார்ட் 2 பண்ணியிருக்கலாம். எங்கே படம் பார்ப்பவர்கள் படம் நல்லாயிருக்குன்னு சொல்லிருவங்கன்னு பயந்து பாட்டெல்லாம் அவரே பாடியிருக்கார். ஸ்ரேயா - இந்த படம் பார்ப்பதுக்கு முன் ஸ்ரேயான்னா எதோ பொம்பளைன்னு நினச்சிருந்தேன். இப்ப தான் தெரியுது ஸ்ரேயான்னா ஆம்பளைன்னு. சுசீ கணேசன் - Five Star எடுத்த சுசீ கணேசனா இது. படம் எடுக்க சொன்னா power point slide எடுத்துருக்காரு. போற போக்கை பார்த்த விஜய் பட டைரக்டர் ஆக சான்ஸ் நிறையவே இருக்கு. ஏகாம்பரம் - இவரு தான் ஒளிப்பதிவாளர். இந்த படத்துல photography ல நிறைய புதுமை பண்ணி இருக்குறதா பேட்டி எல்லாம் குடுத்தாரு. hollywood க்கே இந்த படம் சவால் விடும்னு சொன்னாரு. முதல்ல indian news reel க்கு போட்டியா எடுங்க சார். தானு - இவர் எடுத்த எந்த படமும் ஓடுன மாதிரியே தெரியல. ஆனாலும் சளைக்காம 50 கோடி 60 கோடி ன்னு செலவு பண்றாரு. எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குரானே இவன் ரொம்ப நல்லவனா இருப்பானோ? படம் பார்க்கதவர்களுக்கு - விக்ரம் போடோவையும் ஸ்ரேயா போட்டோவையும் வைத்து பவர் பாயிண்ட் ல ஸ்லைடு ஷோ பன்னுநீங்கன்னா அது தன கந்த சாமி.

Saturday, April 11, 2009

கொத்தனார் தமிழ் உரை

நாளுக்கு நாள் தமிழ் வளர்ந்து வரும் வேகத்தில் தினமும் புது dictionary போடணும் போல இருக்கு. ஏற்கனவே கோனார் தமிழ் உரை இருப்பதனால் காப்பி ரைட் பிரச்சனை வராமல் இருக்க கொத்தனார் தமிழ் உரையை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இந்த கொத்தனார் தமிழ் உரையில் சமீபத்தில் அர்த்தம் மாறிய ஒரு சில வார்த்தைகளை உங்களுக்கு update செய்கிறேன்.
அன்பழகன் -- சட்டையை கழற்ற சொன்னால் வேட்டியையும் கழற்றி விட்டு நிற்பவர்.
அழகிரி -- அப்பா முதலமைச்சராக இருக்கும் போது ஆட்டம் போடுபவர்.
அமைச்சர் -- ரௌடித்தனம் செய்து சம்பாதிப்பவர்.
தேர்தல் -- J.K. ரித்தீஸ் செலவு பண்ணும் திருவிழா.
கருணாநிதி -- இவரை போல ஒரு அப்பா நமக்கு இல்லையே என்று தமிழகத்தில் உள்ள எல்லா மகன்களையும் ஏங்க வைத்த குடும்பத் தலைவர்.
வைக்கோ -- இலங்கை தமிழருக்காக கதறி கண்ணீர் விட்டு நாலு M.P. சீட் வாங்குபவர்.
விஜயகாந்த் -- பாகிஸ்தான் தீவிரவாதி யாரும் உதைக்க சிக்காததால் தமிழக மக்களை வதைப்பவர்.
சரத்குமார், கார்த்திக் -- அவர்களின் ஒரு வோட்டு யாருக்கு என்று தினமும் பத்திரிக்கைகளை குழப்புபவர்கள்.
ஜெயலலிதா -- தினமும் பிரதமர் கனவிலே இருப்பவர்.
பிரதமர் -- ஒரு வார்த்தை பேசும் முன் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் பெர்மிசன் வாங்குபவர்.
ஜனாதிபதி -- இந்திய கிரிக்கெட் மாட்சில் ஜெயிக்கும் போது மட்டும் வாழ்த்தி அறிக்கை விடுபவர்.
இலங்கை தமிழர் -- முப்பது வயசுக்குள் சாவதற்கென்றே பிறந்தவர். இலங்கை பிரச்சனை -- பேச்சையும், பேரணியையும் வளர்த்து விட்டு வோட்டு வாங்கும் பிரச்சனை.