Thursday, October 6, 2011

விஜய் ரசிகன்

அது பிட்டு படங்களுக்கு தமிழ்நாடு முழுக்கவே மிகவும் தட்டுப்பாடான காலம். நான், குமார், கருப்பு மூவரும் மதுரையில் மது, மற்றும் பழனி ஆறுமுகா என்று தியேட்டர்களை தேடி ஓடிய காலம். சில சமயங்களில் மட்டுமே பிட்டு ஓட்டுவார்கள். ஆனாலும் நம்பிக்கையாக தினமும் குமாரும், கருப்பும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தியேட்டருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். எனக்கு அவ்வளவு வசதி இல்லாததால் சில சமயம் மட்டுமே அவர்களுடன் சேர்ந்து பிட்டு படம் பார்க்க முடியும். அப்போது எந்த அரசின் மண்ணாங்கட்டிக் கொள்கையோ தெரியவில்லை. எந்த தியேட்டரிலும் பிட்டு ஓட்டவில்லை. நாங்கள் மூவரும் மிகவும் மனமொடிந்து போனோம். சில மாதங்களில் திடீரென்று குமாரும், கருப்பும் சுறுசுறுப்பாக படம் பார்க்க ஆரம்பித்தனர். அதுவும் தமிழ் படம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன பசங்க திருந்தீட்டன்களா என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது அவர்கள் பார்க்க ஆரம்பித்தது சங்கவி என்ற நடிகை நடித்த படம். சங்கவி அந்தக்காலக்கட்டதில் உட்கார் என்று சொன்னால் படுத்து விடுகிற டைப். அவர் நடித்த படங்களை பார்க்க ஆரம்பித்தனர் இவர்கள் இருவரும்.அப்போது தான் ஒரு விஷயத்தை கவனித்தேன். அது சங்கவி நடிக்கும் படங்கள் பெரும்பாலும் விஜய் நடித்ததகவோ அல்லது அவர் அப்பா SAC டைரக்ட் பண்ணியதாகவோ இருந்தது. SAC ஒரு மாபெரும் கலைஞர். பிட்டு பட உலகம் நிச்சயமாக ஒரு அருமையான ஒரு கலைஞரை இழந்தது பற்றி தன்னைத்தானே கொட்டிகொள்ளும் காலம் வந்தே தீரும். அதனால் என்ன அவர் அந்த பிட்டுக்கலையே நாசுக்காக தன படத்திலும், மகன் படத்திலும் சேர்த்து வந்தார். கரும்பை தேடிய எறும்பு போல் நாங்கள் அவர் படங்களை பார்க்க தொடங்கினோம். எனக்கு கம்ப்யூட்டர் கிடைத்து விட்டதால் உலக பிட்டு எனக்கு பரிச்சயமாகி விட்டது. அதனால் தியேட்டருக்கு போய் பிட்டு பர்ர்க்க அவசியமில்லாமல் போய் விட்டது. ஆனாலும் குமாரும், கருப்பும் சங்கவி மற்றும் விஜய் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தனர். நண்பர்கள் மத்தியில் கேள்வியும் கேலியும் வந்த போது சங்கவி ரசிகர்கள் என்று சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு விஜய் ரசிகர்கள் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நாளடைவில் இந்த சங்கவி ரசிகர்கள் விஜய் ரசிகர்களாகவே மாறினர். சமீபத்தில் மதுரையில் நடந்த விஜய் பட விழாவில் இவர்கள் மிக முக்கிய பங்கற்றினர். மேலும் விஜய் மற்றும் அவர் அப்பா ஆரம்பித்த மக்கள் இயக்கத்தில் இவர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள். இந்த உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் உங்களிடம் ஓட்டு கேட்டு வருவார்கள். ஏற்கனவே SAC சாருக்கு எப்படியாவது பிரதமர் ஆகும் கனவு இருக்கிறது. அதற்க்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது. ஏற்கனவே அவர் பல படங்களில் சட்டத்தையும், அதில் நடித்த நடிகைகளையும் கடித்து குதறியதால் அவருக்கு சட்டமும், பெண்களும் அத்துப்படி. (ஆனால் அவர் படத்தில் வைக்கும் சட்டத்துக்கும் உண்மையான சட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வேற விஷயம்.). அவர் மகனுக்கும் முதல் அமைச்சர் ஆகும் கனவு இருக்கிறது. அதற்காக அரை வேக்காட்டு அண்ணா ஹசாரே உடன் சேர்ந்து ஊழலை எதிர்க்க புறப்பட்டு விட்டார். (டேய் ஒழுங்கா டாக்சை கட்டுங்கடா ). அதற்க்கு கருப்பும் குமாரும் இன்னும் பிற சங்கவி மன்னிக்கவும் விஜய் ரசிகர்கள் உழைக்க தயாராக இருக்கிறார்கள். அவர்களும் மந்திரியாகும் கனவில் இருக்கிறார்கள். இப்படித்தான் இங்கே மந்திரிகளும் உருவாகிறார்கள். ஆமாம் நாம் எங்கே போகிறோம்?