Sunday, March 7, 2010

கதவை திற கழிசடைகள் வரட்டும்

இவருடைய கட்டுரை குமுதத்தில் வரும் போது பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த ஆளை படத்தில் பார்த்தாலே சிரிப்பு தான் வரும் இது வரை படித்ததில்லை. இப்போது இவர் மாட்டிய பிறகு கிடைத்த குமுதம் இதழை தேடி படித்தேன். அது புலன்களை அடக்குவது பற்றியது. மற்றவர்கள் புலன்களை அடக்க வேண்டும். இவர் மட்டும் பு வில் ஆரம்பிக்கிற வேற எதையாவது அடக்குவார். இந்த மாதிரி ஆட்கள் எப்படி வருகிறார்கள். யார் இவர்களை வளர்த்து விடுகிறார்கள் என்று யோசித்ததில் யாரெல்லாம் எப்படி வருமானம் வருது என்று தெரியாதவர்கள் தான் இந்த மாதிரி ஆளிடம் போகிறார்கள். உதாரணமாக ரஜினியை எடுத்துக் கொள்வோம். அவருக்கு அவர் படம் எப்படி ஓடுகிறது என்றே தெரியவில்லை. ஏன் ஓடுகிறது என்றும் தெரியவில்லை.(நமக்கு மட்டும் தெரியுமாக்கும் ). அதனால் இவரை போல ஆட்களிடம் ஆசி வழங்குங்கள் என்று ஒரு அமௌண்டை கொடுக்க வேண்டியது. இப்படித்தான் இவர்கள் வளர்கிறார்கள். பிறகு ஆசிரமம் வைத்து பு (லங்களை) அடக்க வேண்டியது.
மேலும் எது செய்தாலும் அதற்க்கு ஒரு சாயம் பூச வேண்டியது. ஒரு பிரபலமான (?) வலைப்பக்கத்தில் பார்த்தேன். சாமியார் செய்தது தப்பில்லாத மாதிரியும், அதை சன் டிவி ஒளிபரப்பியதும் நக்கீரனில் வந்ததும் தப்பு என்ற ரீதியில் எழுதுகிறார்கள். இதையே தான் கருணாநிதியும் சொல்கிறார். சூத்திரன் என்றால் பத்திரிகையில் தப்பாக எழுதுகிறார்கள் என்று. அப்போது இதை தப்பு என்று இதே வலையில் எழுதி இருந்தார்கள். இருவரும் செய்வது தப்பு என்று நமக்கு மட்டுமே தெரிகிறது. இவர்களெல்லாம் இந்து மதத்தின் ஆதரவாளர்கள் என்று சொல்வதால் மட்டுமே அந்த மதத்தின் மேல் நமக்கு வெறுப்பு வருகிறது. முதலில் சாமியாரை ஆதரிக்க வேண்டியது. அவன் எதாவது செய்து மாட்டினால் யாரும் அதை பற்றி எழுதக்கூடாது. எழுதினால் அதை மஞ்சள் பத்திரிகை என்று சொல்ல வேண்டியது.

கணுக்கால் தெரியும் அளவு சேலை கட்டினாலே ஆபாச படத்தில் அழகி என்று தலைப்பு போடும் குமுதம் தான் இந்த ஆளை கிட்டத்தட்ட ஊருக்கு அறிமுகபடுத்தியது. அவர்கள் செய்தது தப்பில்லையா?.
என்னை பொறுத்தவரை இவர் ஒன்றும் பெரிய தப்பு செய்துவிடவில்லை. தப்பு பெரிதாக தெரிய காரணம் அவர் போட்டிருந்த வேஷம், உருவாக்கப்பட்ட பிம்பம், மற்றும் இந்த மாதிரி செய்திகளில் நமக்கு இருக்கும பொறாமையான ஆர்வம் மட்டுமே.
இதை எழுதும் போது பக்கத்துக்கு வீட்டு பையன் சாமியார் பத்தி கதை எழுதுறீங்களே அதென்ன செக்ஸ் கதைய என்று கேட்டான். (அடப்பாவிகளா)

5 comments:

Unknown said...

/இதை எழுதும் போது பக்கத்துக்கு வீட்டு பையன் சாமியார் பத்தி கதை எழுதுறீங்களே அதென்ன செக்ஸ் கதைய என்று கேட்டான். (அடப்பாவிகளா)//

தல கட்டிப்புடிச்ச ஜோர் அது. சும்மாவா. கலக்கிட்டாரு

Yoga said...

சீதைகள் வாழ்ந்த நாடு!!!

Anonymous said...

சீதைகள் வாழ்ந்த நாடு!!!

Anonymous said...

சாமியார் செய்தது தப்புதான். சன் டீவியும் நக்கீரனும் செய்தது, செய்து கொண்டிருப்பது தப்பே இல்லையா?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in