Wednesday, June 16, 2010

தமிழன் தாங்கு வாண்டா ....


தினமும் பேப்பர் பார்க்கும் போது என் மனதில் எழுந்த சந்தேகங்கள்.
குஷ்பூ இன்னும் தமிழறிஞராக கருணாநிதியால் அறிவிக்கப்படவில்லையே ஏன்?
கருணாநிதி குடும்பத்தில் பிறந்த சிறு குழந்தை கூட தமிழ் புலவராகி விடுகிறதே. ஏன்?
பக்கத்து மாநிலமான கர்நாடகா வில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 28000 கோடி முதலீட்டை பெற்றுள்ள போது, இங்கே 600 கோடி வெட்டியாக நம் பணம் செம்மொழி மாநாடு என்ற பெயரில் வீணாகிறதே. ஏன்?
கருணாநிதி மாநாடு நடத்தி தான் தமிழ் வளர வேண்டுமா? அவருக்கு முன்னாள் தமிழ் என்ற மொழி வாழ்ந்ததோ, வளர்ந்ததோ இல்லையா என்று யாரும் கேட்பதில்லையே. ஏன்?
எல்லா அமைச்சர்களும் தினமும் ஒரு செம்மொழி சிலைக்கு முன் போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார்களே. இவர்கள் இல்லாமலே நிர்வாகம் வழக்கம் போல நடக்கிறதே. இவர்களெல்லாம் ஏன்?
இப்படி ஒரு கேடு கேட்ட மாநாட்டை லக்கி லுக் போன்ற செம்மொழி தமிழர்களெல்லாம் ஆதரிக்கிறார்களே ஏன்?

செம்மொழி தொடர்பில்லாத மேலும் சில சந்தேகங்கள்.
இன்னும் மதுரையில் அழகிரி பாத் ரூம் போனதுக்கு கட் அவுட் வைக்கலையே ஏன்?
கொடநாடு என்றால் ஜெயலலிதாவுக்கு கோபம் வருகிறதே ஏன்?
கிழக்கு பதிப்பகம், அழகிரியின் வாழ்க்கை வரலாறை ஆறு ஆறு மாதங்களாக பிரித்து குறைந்தது 100 புத்தகம் கூட போடவில்லையே ஏன்?

இதற்க்கெல்லாம் ஒரே பதில் தான் இருக்க வேண்டும். அது.....
தமிழன் தாங்கு வாண்டா ....

1 comment:

Unknown said...

என்ன சொல்ல வரீங்க. செம்மொழி மாநாடு தேவையில்லைன்னா?